search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை"

    விருத்தாசலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(40)கொத்தனார். இவரது மனைவி வேம்பாயி(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு, தகராறு செய்தார். வேம்பாயி தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற வேம்பாயி மீதும் தீ பரவியது. படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சென்னை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மோகன், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து விருத் தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூரை அடுத்துள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 38). இவர் சென்னையில்ல தங்கி கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    கடந்த 1 மாதமாக சொந்த ஊரில் இருந்து வந்த அசோக்குமார் அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் தீக்குளித்தார். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிச் சென்று தீயில் எரிந்து கொண்டிருந்த அசோக்குமாரை காப்பாற்றி முதல் உதவி சிகிச்சைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உரியவரிடம் கொடுத்ததுடன், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×